கொரோனா பரிசோதனையின் முடிவுகள் இனிமேல் ஐந்து நிமிடத்தில்!!!
அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த இந்திய வம்சாவளியினை சேர்ந்த விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவை 5 நிமிடத்திலேயே கண்டறியும் சோதனை கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இப்போதைய கொரோனா பரிசோதனை, ஆர்.என்.ஏ. அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு காகித அடிப்படையிலானது.
கிராபினை கொண்டு, மின்வேதியியல் சென்சார் என்ற தொடுதிறன் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த கருவியை பயன்படுத்தி கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும் பரிசோதித்தனர். அதில் கொரோனா மாதிரியில் வைரஸ் மரபணு மூலக்கூறு இருப்பதை 5 நிமிடத்துக்குள் அக்கருவி கண்டுபிடித்தது. இது கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
